search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் தேரோட்டம்"

    • பரமத்திவேலூரில் உள்ள மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த மாதம் 19-ந் தேதி தொடங்கியது.
    • தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு‌ அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த மாதம் 19-ந் தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து இரவு கோவில் முன்பு கம்பம் நடப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், செல்லாண்டி அம்மன், கொங்கலம்மன் கோவில்களில் காப்பு கட்டும் விழாவும் நடைபெற்றது.

    20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. 26-ந் தேதி இரவு மறுகாப்பு கட்டுதலும், கிராம சாந்தியும் நடைபெற்றது.

    27-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 2-ந் தேதி வரை தினந்தோறும் கட்டளை தாரர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    3-ந் தேதி வடிசோறு நிகழ்ச்சியும், பரிவட்டம் சூட்டுதலும் நடைபெற்றது. நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்ஶ்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து மாலை 6 மணிக்கு நிலையை அடைந்தது.

    இதில் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இன்று இரவு பொங்கல் மாவிளக்கு பூஜையும், 6-ந் தேதி அதிகாலை கம்பம் ஆற்றுக்கு செல்லுதலும், 7-ந் தேதி மாலை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை வேலூர் மகா மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் எட்டுப்பட்டி ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர். 

    • 150 கிராம மக்களுக்கு காளியம்மன் திருவீதி உலா 11 நாட்கள் சென்று திரும்பி கோவிலுக்கு வந்த பிறகு மகா தேரோட்டம் நடைபெறும்.
    • காளியம்மன் கோவில் மகா தேரோட்டம் 300 ஆண்டுகளைத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை பகுதியில் கால பைரவர் கோவில் சென்றாய பெருமாள் கோவில் உள்ளிட்ட புகழ்பெற்ற கோவில்கள் அமைந்துள்ள பகுதியில் அருகிலேயே சுமார் 400 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த காளியம்மன் கோவிலில் அமைந்துள்ளது.

    இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் தொடங்கி சித்திரை மாதம் வரை சுமார் 15 நாட்கள் தேர்த்திருவிழா மற்றும் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

    தேர் திருவிழாவிற்கு முன்னதாக காளியம்மனை குலதெய்வம் ஆகும். கண் கண்ட தெய்வமாகவும் வணங்க க்கூடிய 150 கிராம மக்களுக்கு காளியம்மன் திருவீதி உலா 11 நாட்கள் சென்று திரும்பி கோவிலுக்கு வந்த பிறகு மகா தேரோட்டம் நடைபெறும்.

    இந்த திருவிழாவின் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் வாரச்சந்தையும் மாட்டுச்சந்தை உள்ளிட்டவை நடைபெறும் என்பதால் சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் பொதுமக்கள் பக்தர்கள் என அனைவரும் திருநள்ளாக திருவிழாவிலும் வாரச்சந்தையிலும் மாட்டு சந்தையிலும் கலந்து கொள்வார்கள்.

    அதேபோல் நேற்று காளியம்மன் கோவில் மகா தேரோட்டம் 300 ஆண்டுகளைத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. (கொரோனா பேரிடர் காலத்தில் மட்டும் இரண்டு ஆண்டுகள் தேர் திருவிழா நடைபெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது).

    தேர் திருவிழா நடைபெறும் 15 நாட்களும் கோவில் வளாகத்தின் அருகிலேயே காலை முதல் மாலை வரை கோவிலுக்கு வரும் பக்தர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் பசியாற கூழ் அமுது தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கூழ் அமுது 150 கிராம மக்களின் பங்களிப்புடன் நடைபெற்று வருகிறது.

    மேலும் இந்த பகுதியில் மட்டும் தேர் திருவிழாவில் விற்பனையாகும் தேங்காய் மிட்டாய் சுவைப்பதற்காகவே பல்வேறு பகுதியில் இருந்தும் பொதுமக்கள் அதிகளவில் வருகின்றனர்.

    நேற்று தேர்த்திருவிழா தேரோட்டத்தின் போது சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டதால் அதியமான் கோட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • நினைத்தது நிறைவேற வேண்டி வாழைப்பழத்தில் தவணை இலை அருகம்புல் சுற்றி தேரின் மீது எறிந்தனர்.
    • நகர மெங்கும் அன்னதானம், நீர்மோர், பானகம், பாசிப்பருப்பு ஆகியவை தேர் திருவிழாவிற்கு வந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் உள்ள ஸ்ரீ சவுந்தரவல்லி சமேத ஸ்ரீ பேட்டராய் சுவாமி கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் ஏராளமான வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

    பழமையும் சிறப்புமிக்க இந்தக் கோவிலின் தேர் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு தேர் திருவிழா நிகழ்ச்சிகள் கல்யாண உற்சவத்துடன் தொடங்கி கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

    தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம், அம்சவாசன உற்சவம் நடைபெற்றது. நேற்று இரவு திங்கள்கிழமை 9 மணிக்கு கஜேந்திர மோக்ஷம் என்ற ராமபாணம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. தளி எம்.எல்.ஏ ராமசந்திரன், ஒசூர் எம்.எல்.ஏ. பிரகாஷ், தளி ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி, தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் சீனிவாசன், பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

    முதலில் சவுந்தரவல்லி தாயார் தேரை இழுத்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி பேட்டராய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட சுவாமிக்கு 5 அடுக்கு தேரில் வைத்து பூஜைகள் செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து வேத மந்திரங்கள் ஒலிக்க மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச்சென்றனர். அப்போது பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. என பக்தி கோஷத்துடன் கோஷங்களை முழங்கினார்கள் விழாவை முன்னிட்டு பக்தர்கள் தங்கள் மனதில் நினைத்தது நிறைவேற வேண்டி வாழைப்பழத்தில் தவணை இலை அருகம்புல் சுற்றி தேரின் மீது எறிந்தனர்.

    மேலும் தங்களின் விளை நிலங்களில் தானியங்கள் நன்கு விளையும் வேண்டும் என வேண்டிக் கொண்டு தேரின் மீது நவதானியங்களை எறிந்து நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

    தேன்கனிக்கோட்டை நகர மெங்கும் அன்னதானம், நீர்மோர், பானகம், பாசிப்பருப்பு ஆகியவை தேர் திருவிழாவிற்கு வந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இத்திருவிழாவில் தேன்கனிக் கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் கர்நாடக, ஆந்திர மாநில இருந்தும் பல்லா யிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து இன்று இரவு சம்பூர்ண இராமாயணம் நாடகம் நடைபெறுகிறது. நாளை காலை 8 மணி அளவில் எருதுவிடும் விழா, இரவு 8மணிக்கு பாட்டு கச்சேரி தொடர்ந்து பல்லக்கு உற்சவ வாணவேடிக்கை நடைபெறும்.

    தேன்கனிகோட்டை டி.எஸ்.பி. தலைமையில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • 100 அடி உயர அலங்கரிக்கப்பட்ட தேரில், அம்மனை வைத்து மேள,தாளம் முழங்க கிராம வீதிகளில் தேர் இழுத்துச் செல்லப்பட்டது.
    • இந்த தேரினை, மாடுகள் இழுத்துச் செல்வது ஆண்டுதோறும் நடைபெறும் சிறப்பம்சமாகும்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக எல்லைப்பகுதியில் உஸ்கூர் கிராமம் உள்ளது. இங்கு மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ மத்தூரம்மா என்ற அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள், 3 நாட்கள் நடைபெற்றன. முதல் நாள் நிகழ்ச்சியாக, மா விளக்கு ஊர்வலம் மற்றும் பூஜையும், தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக, நேற்று முன்தினம்,100 அடி உயர அலங்கரிக்கப்பட்ட தேரில், அம்மனை வைத்து மேள,தாளம் முழங்க கிராம வீதிகளில் தேர் இழுத்துச் செல்லப்பட்டது. இந்த தேரினை, மாடுகள் இழுத்துச் செல்வது ஆண்டுதோறும் நடைபெறும் சிறப்பம்சமாகும். விழாவில், ஓசூர், அத்திப்பள்ளி, ஆனேக்கல், எலக்ட்ரானிக் சிட்டி மற்றும் சுற்று வட்டாரங்களிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவையொட்டி நாட்களும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • முதலில் விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
    • மூன்று தேர்களும் கோவிலைச் சுற்றிவந்து நிலையை அடைந்தன.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் கோட்டப்பட்டி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில். இப்பூவுலகில் அவதாரம் எடுத்த ராமபிரான், ராவணனை சம்ஹாரம் செய்து திரும்புகையில் முதல்கால பூஜையை ராமேஸ்வரத்திலும், இரண்டா ம்கால பூஜைக்காக தீர்த்தகிரி மலை (தீர்த்தமலை) மீது அம்பு எய்தி, தீர்த்தம் உண்டாக்கி அந்த தீர்த்தத்தை கொண்டு பூஜைகளை முடித்தார்.

    அந்த தீர்த்தமே தீர்த்தமலையிலுள்ள ராமர் தீர்த்தமாகும். ஸ்ரீ ராமர், பார்வதி தேவி, குமரக்கடவுள், அக்னிதேவன், அகத்திய முனிவர்ஆகியோர் தவம் செய்து பாவ விமோசனம் பெற்ற தலம் இந்த திருத்தலமாகும்.

    தருமபுரி மாவட்டத்தில் அருணகிரிநாத சுவாமிகளால் திருப்புகழ் அருளி செய்யப்பட்ட ஒரே திருத்தலம் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருத்தலமாகும்.

    வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த கோவில் மாசிமகத் தேரோட்டம் மார்ச் 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து, பல்வேறு கட்டளைதாரர்கள், உபயதாரர்கள் சார்பில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள், சுவாமி திருவீதி உலா, பூஜைகள், திருக்கல்யாணம் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று தொடங்கியது. கோவில் எதிரே விநாயகர், தீர்த்தகிரீஸ்வரர், வடிவாம்பிகை ஆகிய சுவாமிகளின் தேர்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

    இதையடுத்து, பக்தர்கள் பொரி, உப்பு, முத்துக்கொட்டை உள்ளிட்ட நவ தானியங்களை தேர்கள் மீது இறைத்து தங்களின் நேர்த்தி கடனை செலுத்தி சுவாமிகளை வழிபட்டனர்.

    முதலில் விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து, தீர்த்தகிரீஸ்வரர், வடிவாம்பிகை சுவாமிகளின் தேர்களை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

    மூன்று தேர்களும் கோவிலைச் சுற்றிவந்து நிலையை அடைந்தன. தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், திருப்பத்தூர், பெங்களூரு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் திருவிழாவில் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர்.

    தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து தேர் திருவிழாவுக்காக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

    • 3-ந் தேதி நடைபெற உள்ளது.
    • போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    அன்னூர்,

    அன்னூரில் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மன்னீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தேர்த்திரு விழா வருகிற 3-ந் தேதி நடைபெற உள்ளது.

    கோவை மாவட்டம், அன்னூரில் சுமார் 1300 ஆண்டு பழமை வாய்ந்த அருந்தவச்செல்வி உடன மர் ஸ்ரீ மன்னீஸ்வர சுவாமி கோவில் உள்ளது.

    இக்கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் தேரோட்டம் வெகுவிம ரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன் ஒரு பகு தியாக நடப்பாண்டின் தேர்த்திருவிழா கடந்த 27-ந் தேதி கிராம தேவதை வழி பாடு, கிராம சாந்தியுடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து நேற்று கோவிலில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து தினமும் பல்வேறு அலங் காரமும், அபிஷேக ஆராத னைகளும் நடைபெற உள்ளன. ஜனவரி 2-ந் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. விழா வின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித் தல் நிகழ்ச்சியானது 3-ந் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 8 மணிக்கு அருந்தவச் செல்வி உடனமர் மன்னீஸ் வரர் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    பகல் 11 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியானது நடைபெற உள்ளது. கோவை,திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்ள உள்ள தால் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடு பட உள்ளனர். 

    • அகரம்சீகூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது
    • திருக்கல்யாணம் நடைபெற்றது

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் கிராமத்தில் மாரியம்மன் கோயிலில் திருவிழா கடந்த 9-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் சாமி திருவீதி உலா நடைபெற்று வந்த நிலையில் நேற்று காலை மாரியம்மனுக்கு மஞ்சள், பன்னீர், தயிர், சந்தனம் உட்பட 18-வகையான மூலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையும் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து நேற்று காலை காத்தவராயன்- ஆரியமாலா திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து வெடி வெடித்தும் , மேள தாளங்கள் முழங்க அருள்மிகு மாரியம்மன் சாமியை திருத்தேருக்கு கொண்டு வரப்பட்டு திருஷ்டி பூஜைகள் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது.

    கிராம முக்கியஸ்தர்கள், பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேர் தேரோடும் வீதிகளின் வழியாக சென்று மீண்டும் நிலையம் வந்தடைந்தது.விழாவின் ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர் மேலும் இந்த தேரோட்டத்தில் எந்தவித அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க மங்களமேடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • உற்சவர் தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன் பட்டி காளியம்மன் கோவில் தேரோட்டம் இன்று காலையில் நடைபெற்றது.

    தேரோட்டத்தை முன்னிட்டு மூலவர் காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெற்றது தொடர்ந்து உற்சவர் தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் காலை முதலே நேர்த்திக்கடன் செலுத்த நூற்றுக்கணக்கான ஆடுகளையும் கோழிகளையும் பக்தர்கள் பலியிட்டு காணிக்கை செலுத்தினர். தொடர்ந்து தேரின் மீது உப்பு மிளகு உள்ளிட்டவைகளை வீசி எறிந்து வணங்கினர்.

    இந்த தேரோட்டத்தில் குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ, குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், குடியாத்தம் நகர் மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் நத்தம்பிரதீஷ் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, முன்னாள் அறங்காவலர் குழு நிர்வாகிகள் மற்றும் தேர்திருவிழா குழுவினர், ஆலய விழா கமிட்டினர், அப்பகுதி இளைஞர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

    குடியாத்தம் டவுன் புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோவில் தேர் திருவிழா இன்று காலையில் நடைபெற்றது இந்த தேரோட்டத்தை குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், நகர் மன்ற தலைவர் எஸ். சவுந்தரராஜன் உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் நகர மன்ற தலைவர் அமுதாசிவப்பிரகாசம், முன்னாள் அறங்காவலர் குழு நிர்வாகிகள் ஏ.நடராஜன், சண்முகம், வி.என்.தனஞ்செயன். கே.எம்.ஜி.விட்டல், எஸ்.எஸ்.பி.பாபு, நகர மன்ற உறுப்பினர்கள் சுமதி மகாலிங்கம், எம்.எஸ்.குகன், வழக்கறிஞர் எம்.வி. ஜெகதீசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, முன்னாள் அறங்காவலர் குழு நிர்வாகிகள், தேர் கமிட்டியினர் விழா குழுவினர் இளைஞர் அணி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது
    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் முத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம் நே ற்று நடைபெற்றது. கீரமங்கலம் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, கோயிலில் தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், வீதியுலாவும் நடைபெற்று வந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதில், அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை எழுந்தருளச்செய்து, தேரோடும் வீதிகள் வழியே ஏராளமானோர் தேரை வடம்பிடித்து இழு த்து வந்து நிலையை அடைந்தனர். இதில், கீரமங்கலம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர். கீரமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

    • கோவில் தென்புறத்தில் பட்டாசு வெடித்தபோது அதிலிருந்து தீப்பொறி கோவில் முன்பு போடப்பட்டிருந்த கூரைப்பந்தலில் திடீரென்று விழுந்தது.
    • சரியான வழிகாட்டு நெறிமுறை இல்லாத காரணத்தால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூரில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் தேரோட்டம் நடைபெறும்.

    கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு ஆனித் திருவிழா கடந்த 3 -ந் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நேற்று 10-ம் நாள் திருவிழாவின் போது அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளிய தெப்ப தேரோட்டம் நடைபெற இருந்தது. இதைக்காண சுமார் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.

    விழாவையொட்டி இரவு சுமார் 9.30 மணியளவில் கோவில் தென்புறத்தில் பட்டாசு வெடித்தபோது அதிலிருந்து தீப்பொறி கோவில் முன்பு போடப்பட்டிருந்த கூரைப்பந்தலில் திடீரென்று விழுந்தது. இதனால் தீ மளமளவென எரிந்தது. அலங்கார பந்தல் முற்றிலும் எரிந்து நாசமானது.

    இதைப்பார்த்ததும் பக்தர்கள் மற்றும் பெண்கள் கைக்குழந்தையுடன் நாலாபுறமும் சிதறி ஓடினர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஷேக் அப்துல்லா தலைமையிலான குழுவினர் பாதுகாப்புக்காக அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு வாகனம் மூலமாக தண்ணீரை பீய்ச்சி அடித்து உடனடியாக தீயை அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

    தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் அவர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

    சரியான வழிகாட்டு நெறிமுறை இல்லாத காரணத்தால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பெரம்பலூரை அடுத்த எசனையில் பிரசித்தி பெற்ற செங்கமல வல்லித்தாயார் சமேத வேணுகோபாலசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • இன்று (ஞாயிற்றுக்கிழமை) வேணுகோபாலசுவாமி சூரியவாகனத்தில் வீதியுலா வருகிறார்கள். நாளை (திங்கட்கிழமை) புன்னை மர வாகனத்திலும், 21-ந்தேதி மட்டையடி மற்றும் ஊஞ்சல் உற்சவமும், 22-ந்தேதி விடையாற்றி நிகழ்ச்சியும் நடக்கிறது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரை அடுத்த எசனையில் பிரசித்தி பெற்ற செங்கமல வல்லித்தாயார் சமேத வேணுகோபாலசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் இரவில் அன்னம், சிம்மம், அனுமந்தர், சந்திரன், கருடன், யானை, நாகபாஷம் ஆகிய வாகனங்களில் சுவாமி புறப்பாடும், சக்கரத்தாழ்வார் திருவீதி உலாவும் நடந்தது.

    இதையடுத்து, கடந்த 16-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும், இரவில் பூப்பல்லக்கில் சுவாமி புறப்பாடும் நடைபெற்றது. நேற்று முன்தினம் குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது.

    தேரோட்டம் விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 21 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் வேணுகோபாலசுவாமி- பாமா, ருக்மணி காலை 11 மணியளவில் எழுந்தருளினர். பின்னர் தேரை பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

    இந்த தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மாலை 5 மணியளவில் கோவில் நிலையை வந்தடைந்தது. இந்த விழாவில் இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் ஹரிஹரசுப்ரமணியன் (மலைக்கோட்டை), லட்சுமணன் (திருச்சி), கோவில்ஆய்வாளர் வினோத்குமார், கோவில் செயல் அலுவலர் தேவி, கோவில் தக்காருமான ஹேமாவதி உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதையடுத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) வேணுகோபாலசுவாமி சூரியவாகனத்தில் வீதியுலா வருகிறார்கள். நாளை (திங்கட்கிழமை) புன்னை மர வாகனத்திலும், 21-ந்தேதி மட்டையடி மற்றும் ஊஞ்சல் உற்சவமும், 22-ந்தேதி விடையாற்றி நிகழ்ச்சியும் நடக்கிறது.

    தேரோட்ட ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்து வருகிறார்கள்.

    • திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் தேரோட்டம் இன்று காலை நடந்தது.
    • கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையில் அமைந்துள்ளது பெரியநாயகி உடனுறைவீரட்டானேஸ்வரர் கோவில்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையில் அமைந்துள்ளது பெரியநாயகி உடனுறைவீரட்டானே ஸ்வரர் கோவில். இது 5ஆயிரம் ஆண்டு களுக்குமுற்பட்டது. The procession to the Travancore Veerattaneswarar temple took place this morningஇங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம்சுவாதிதினத்தன்று10நாட்கள்பிரம்மோற்சவம்நடைபெறுவதுவழக்கம்.இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவவிழா கடந்த 3-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும்காலை மாலைஇருவேளையும் அபிஷேகம், ஆராதனை, விசேஷ பூஜை, யாக வேள்வி ஆகியவை நடைபெற்று சாமி, அம்பாள், பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் மகாதீபாராதனை நடைபெற்றுவீதிஉலா காட்சிநடைபெற்றுவந்தது. இன்று(11-ந் ) காலை பிரம்மோற்சவத்தின் முக்கிய திருவிழாவானதேரோட்டம் நடைபெற்றது. இதனையொட்டி திரிபுர சம்ஹாரமூர்த்தி சுவாமிக்குஅதிகாலை 4:30 மணிக்கு சிறப்புஅபிஷேகம், ஆராதனை,விசேஷ பூஜைகள், நடைபெற்றது. திரிபுரசம்ஹாரமூர்த்தி சிறப்புமலர்அலங்காரத்தில்திருத்தேரில்எழுந்தருளினார். பின்னர் தேர் பூஜைகள் நடந்து 8 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெற்றது. பெரியதேரில் சம்கார மூர்த்திஎழுந்தருளினார். சின்ன தேரில் விநாயகர், முருகர்,சண்டிகேஸ்வரர் எழுந்தருளினார் தேர் புறப்பாடுநடைபெற்றதும்கூடியிருந்தஆயிரக்கணக்கான பக்தர்கள் ஹரஹர மகாதேவா, ஓம் நமசிவாயம், திருச்சிற்றம்பலம் என விண்ணதிரமுழங்கினர்நாதஸ்வரம்,கைலாயவாத்தியம், மேளதாளங்கள்சங்கொலி முழங்கமாடவீதியில் தேர் பவனி வந்தது.

    ×